கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை

கோவை : கோவை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஒத்திகை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.


கோவை : கோவை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஒத்திகை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.



தெற்கு தீயணைப்புத் துறை நிலைய அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 30 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த ஒத்திகையின் போது, தீ விபத்து மற்றும் நிலநடுக்க காலங்களில் எவ்வாறு மீட்புப் பணிகள் நடைபெறுகிறது? என்பதை செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.



இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் கலந்துகொண்டு ஊழியர்களுக்கு பேரிடர் தொடர்பான துண்டு பிரசுகரங்களை வழங்கினார். தொடர்ந்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை கயிறு, வலை உபகரணங்கள் கொண்டு மீட்பது, திடீர் தீ விபத்து ஏற்படும் போது தீயை கட்டுப்படுத்துவது குறித்து அரசு ஊழியர்களே செய்து காட்டினர்.

இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...