உணவக மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு : இழப்பீடு கோரி உடலை வாங்க மறுத்து போராட்டம்

திருப்பூர் : அவினாசியில் உணவக மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் : அவினாசியில் உணவக மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 



திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சார்பதிவாளர் அலுவலகம் எதிரே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சியாம் என்பவர் "அமிர்தம் உணவகம்" நடத்தி வந்தார். இந்த உணவகம் மழையினால் சுவர் ஈரமாகி வலுவிழந்து இருந்து வந்தது. 

இந்த நிலையில், இந்த ஹோட்டல் பகுதி திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், நியூ திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் விடுதியில் தங்கி பணிபுரியும் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பெண்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். 

இந்த விபத்தில் வடமாநில பெண் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர், பலத்த காயங்களுடன் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிய ரம்யாவை பொதுமக்கள், தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் போலீசார் இணைந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 



இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரம்யா, திடீரென உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் ரம்யாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை தரும் வரை உடலை வாங்க மாட்டோம் என மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர், போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...