மாவட்ட ரீதியாக பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் 3-வது இடம்: ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

திருப்பூர்: தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மாவட்ட அளவில் திருப்பூர் 3-வது இடத்தை பிடித்துள்ள நிலையில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மாவட்ட அளவில் திருப்பூர் 3-வது இடத்தை பிடித்துள்ள நிலையில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

12-ம் வகுப்புக்கான தேர்வெழுதிய மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தத் தேர்வு முடிவுகளைப் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அவர் கூறியதாவது :- தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 3 இடத்தை திருப்பூர் மாவட்டம் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 11,114 மாணவர்களும், 13,466 மாணவிகளும் உள்பட மொத்தம் 24,580 பேர் தேர்வெழுதினர். இதில், 10,530 மாணவர்கள், 13, 110 மாணவிகள் உள்பட மொத்தம் 23,640 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.75 சதவீதமும், மாணவிகள் 97.36 சதவீதமும் என சராசரியாக 96.18% ஆகும். கடந்த ஆண்டு பெறப்பட்ட 96.05 % காட்டிலும், 0.13 சதவீதம் அதிகம் பெற்றுள்ளது. அரசுப் பள்ளிகளை பொருத்த வரை 93.45 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாக தேர்வெழுதி தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன், எனக் கூறினார்.

மேலும், தேர்வு முடிவுகளை 9.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று இருந்த நிலையில், தேர்வு முடிவுகளை மாவட்ட ஆட்சியர் ஒருமணி நேரத்திற்கு பிறகே அறிவித்தது செய்தியாளர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...