குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட மாணவர் 1,093 மதிப்பெண்கள் பெற்று சாதனை

கோவை: குழந்தைத் தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட மாணவர் 1,093 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.


கோவை: குழந்தைத் தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட மாணவர் 1,093 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்த 8 பேர் சமீபத்தில் மீட்கப்பட்டனர். அதில் ஏழு பேர் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.



அவ்வாறு மீட்கப்பட்ட மாணவர்களில் எஸ். தரணிதரன், இ. ஜெகதீஷ், வி.லாவண்யா, பி.ராஜேஸ்வரி, வி.தினேஸ், எல்.சொப்னில் ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குழந்தை தொழிலாளியாக இருந்த மீட்கப்பட்ட தரணிதரன் 1,093 மதிப்பெண் பெற்ற நிலையில், மருத்துவம் படிக்க போவதாகவும் அதற்காக நீட் தேர்வு எழுதியதாகவும் தெரிவித்தார்.



இது குறித்து அவர் கூறுகையில், "குடும்ப சூழ்நிலை காரணமாக 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணிக்கு சென்றேன் அதன் பின் குழந்தை தொழில் ஒழிப்பு அதிகாரிகளால் கண்டறியப்பட்டு சிறப்பு முகாமில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்றேன். மருத்துவம் படித்து இருதய நோய் நிபுணராக வரவேண்டும் என்பதே எனது ஆசை. நீட் தேர்வு எழுதியுள்ளேன். என்னைப் போன்ற குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு கல்வி பயில வேண்டும்." என்றார்.

Video: A.Vignesh

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...