கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா

கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக எடியூரப்பா இன்று பதவியேற்று கொண்டார். பதவியேற்றவுடனே விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக எடியூரப்பா இன்று பதவியேற்று கொண்டார். பதவியேற்றவுடனே விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். 

கர்நாடகாவில் 222 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க., 104 இடங்களை வென்றது. அங்கு ஆட்சியமைக்கத் தேவையான 113 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை. இதையடுத்து காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் 116 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் வாஜூபாய் வாலாவிடம் ம.ஜ.த., தலைவர் குமாரசாமி மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் பெரும்பான்மை இல்லாத போதும் தனிப்பெரும் கட்சி என்கிற முறையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று அறிவிக்கக் கோரி காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நள்ளிரவில் மனு அளிக்கப்பட்டது. 



இந்நிலையில், இன்று காலை பெங்களூருவில் ஆளுநர் மாளிகையில் எடியூரப்பாவின் பதவியேற்பு விழா நடைபெற்றது. அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பா மட்டுமே பதவியேற்ற நிலையில் அவருடன் வேறு அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய எடியூரப்பா கர்நாடகாவில் ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...