சிறப்பாசிரியர்களை பணிநிரவல் செய்ய எதிர்ப்பு : மாணவர் சேர்க்கை சரியுமே தவிர அதிகரிக்காது என ஆசிரியர்கள் கருத்து

கோவை : அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை சரிவை காரணம் காட்டி, சிறப்பாசிரியர்களை பணிநிரவல் (டிரான்ஸ்ஃபர்) செய்யும் முயற்சிக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


கோவை : அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை சரிவை காரணம் காட்டி, சிறப்பாசிரியர்களை பணிநிரவல் (டிரான்ஸ்ஃபர்) செய்யும் முயற்சிக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் அரசு அனுமதித்த ஒவியம், தையல், இசை பாடங்களுக்கான சிறப்பாசிரியர்களின் பணியிடங்கள் 3,333 ஆகும். இதில், 2017-ம் ஆண்டின் நிலவரப்படி 2,454 சிறப்பாசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். 880 சிறப்பாசிரியர்களின் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. 

கோவை மாவட்டத்தில் 192 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், 109 பள்ளிகளில், சிறப்பாசிரியர்கள் பணிபுரிகின்றனர். ராஜினாமா, பணி ஓய்வு காரணமாக, தற்போது 14 இடங்கள் காலியாக உள்ளன. மற்ற பள்ளிகளில், ஓவிய பாடத்துக்கு நிரந்தர ஆசிரியர் இல்லை எனவும் கூறப்படுக்கிறது. இப்பணியிடங்களுக்காக, கடந்தாண்டு செப்டம்பரில் நடத்தப்பட்ட சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், காலிப்பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இது குறித்து கலை ஆசிரியர்கள் நலச்சங்க தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார் கூறும் போது :- கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையால், பல பள்ளிகளில் ஓவிய பாடமே, காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 250 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பள்ளிகளில், பணிபுரியும் ஓவிய ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு வரும் கல்வியாண்டில் பணிநிரவல் செய்யப்படவுள்ளனர். அதேபோல, அப்பள்ளிகளில் இருந்து அந்தப் பணியிடமும் வரும் காலங்களில் நீக்கப்படும் எனக் கருதுகிறேன்.

பெரும்பாலான பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சிறப்பாசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 83 சிறப்பாசிரியர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் பணி நிரவல் செய்யப்படவுள்ளனர். இதுபோன்ற திட்டங்களால் பல ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். 2012-ம் ஆண்டு தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக 16,549 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள், என்றார்.



இதேபோல, ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து ஓவிய ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "அரசுப்பள்ளி மாணவர்களின் தனித் திறமைகளை ஊக்குவிக்க, சிறப்பு பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். மாணவர் சேர்க்கை குறைவதற்கும், கலைப்பாட ஆசிரியர்களுக்கும் சம்பந்தமே இல்லை. 250 மாணவர்களுக்கு கீழ் படிக்கும், அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர்களை, பணிநிரவல் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. இப்பள்ளிகளின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்காமல், ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதால், எந்தப் பலனும் இல்லை. இதன்மூலம், மேலும் மாணவர் சேர்க்கை சரியுமே தவிர அதிகரிக்காது' என்றனர்.

இது குறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் கூறுகையில், "சிறப்பாசிரியர்களை பணிநிரவல் செய்யும்படி எந்த அரசாணையும் இதுவரை வரவில்லை," எனக் கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...