அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் விரைவில் இணைப்பு: மேட்டுப்பாளையத்தில் முதலமைச்சர் பேச்சு

மேட்டுப்பாளையம்: அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் விரைவில் இணைக்கப்படும் என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


மேட்டுப்பாளையம்: அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் விரைவில் இணைக்கப்படும் என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உதகை செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உதகையில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ள மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கார் மூலம் உதகை சென்றார். அப்போது, அவருக்கு மேட்டுப்பாளையத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "கோவையில் அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்டுள்ள பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குளம் குட்டைகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால், கோவை மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தொடங்கப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள் துரிதகதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது," என்றார். இதனைத் தொடர்ந்து, அவர் உதகைக்குப் புறப்பட்டு சென்றார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...