ஆர்.எஸ்.புரம் பகுதியில் 'மாதிரி சாலை'யை அமைப்பதற்கான டெண்டர் மே 22-ம் தேதி நடக்கிறது

கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் மாதிரி சாலை அமைக்கும் திட்டத்திற்கான டெண்டர் வரும் 22-ம் தேதி நடத்தப்படவுள்ளது.


கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் மாதிரி சாலை அமைக்கும் திட்டத்திற்கான டெண்டர் வரும் 22-ம் தேதி நடத்தப்படவுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் டி.பி சாலை, டி.விசாமி சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, என்.எஸ்.ஆர் சாலை, மசக்காளிபாளையம் சாலை, சங்கனுார் சாலை ஆகிய ஆறு இடங்களில் மாதிரிசாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை, ஸ்மார்ட் பெஞ்ச், வாகனங்கள் நிறுத்தும் இடம், தொலைதொடர்பு மற்றும் மின்சார கம்பிகள் போன்றவற்றை தரைவழியில் அமைத்தல், பாதாள சாக்கடை இணைப்பு போன்ற பல்வேறு வசதிகள் இந்த மாதிரி சாலைகளில் உருவாக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக டி.பி.சாலையில் 1.8 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 21 மீட்டர் அகலத்தில், ரூ.25 கோடி செலவில் மாதிரிசாலை உருவாக்குவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்கான டெண்டர் வரும் 22-ம் தேதி நடத்த முடிவு செய்யபட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் நிறுவனம், டி.பி.சாலையில் மாதிரி சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து டி.விசாமி சாலை மற்றும் ரேஸ்கோர்ஸ் சாலைகளுக்கான மாதிரிசாலை பணிகளை விரைவில் தொடங்கவுள்ளனர். மற்ற சாலைகளான, என்.எஸ்.ஆர். சாலை, மசக்காளிபாளையம் சாலை மற்றும் சங்கனுார் சாலை ஆகியவை, 'ஸ்மார்ட் சிட்டி' எல்லைக்குள் வராததால், இந்த சாலைகளுக்கான திட்டப் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...