முதலமைச்சரின் கார் சென்ற தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்ததால் பரபரப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா தேசிய நெடுஞ்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்ற கார் கடந்த 15 நிமிடங்களில் சாலையில் மரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா தேசிய நெடுஞ்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்ற கார் கடந்த 15 நிமிடங்களில் சாலையில் மரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, கோடநாடு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. நேற்று மட்டும் உதகையில் 44 மி.மீ மழை பதிவாகியுள்ள நிலையில் இன்று மதியம் உதகையில் மிதமான மழை பெய்தது.



இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள 122-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் இருந்து கோத்தகிரி வழியாக காரின் மூலம் உதகைக்கு இன்று வந்தடைந்தார். இவரது கார், தொட்டபெட்டாவை கடந்த சுமார் 15 நிமிடங்களில் உதகை, கோத்தகிரி நெடுஞ்சாலையில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

இதனால், முதலமைச்சரின் கார் அதிர்ஷ்டவசமாக விபத்துக்குள்ளாகாமல் தப்பியது. மரம் விழுந்த விபத்தினால், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினர். தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றிப் போக்குவரத்தை சீர் செய்தனர்.



Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...