திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தை ஏற்றது உச்சநீதிமன்றம்: காவிரி வழக்குகள் முடித்து வைப்பு

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை, உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு வழக்குகளை முடித்து வைத்தது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை, உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு வழக்குகளை முடித்து வைத்தது.

மாநிலஅரசுகள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில், காவிரி நதிநீர் பங்கீட்டை முறைப்படுத்துவது குறித்த, திருத்தப்பட்ட வரைவு செயல்திட்ட அறிக்கையை, உச்சநீதிமன்றத்தில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், மேலாண்மை வாரியம் என்பதற்கு பதில், மேலாண்மை ஆணையம் என்ற பெயரில், 10 உறுப்பினர்கள் அடங்கிய குழு செயல்படும். நீர் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், மேலாண்மை ஆணையத்திடம் இருக்கும். முக்கிய முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மத்திய அரசின் ஆலோசனையை பெறலாம். மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம், டெல்லியில் செயல்படும் என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இறுதி தீர்ப்பளித்த நீதிபதிகள், மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். மேலும், இந்தக் காவிரி மேலாண்மை ஆணையத்தை நடப்பு பருவ காலத்திற்கு முன்பு செயல்படுத்த வேண்டும். இதனை அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும் எனக்கூறி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது. மேலும், மத்திய அரசுக்கு எதிராக அவமதிப்பு ஏதுமில்லை எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...