கோவையில் டிஜிட்டல் மனிதவளம் குறித்த கருத்தரங்கை தொடங்கி வைத்தார் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் (வீடியோ)

கோவை: கோவையில் டிஜிட்டல் மனிதவளம் பற்றிய தென்மண்டல அளவிலான 2 நாள் கருத்தரங்கை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் துவக்கி வைத்தார்.

கோவை: கோவையில் டிஜிட்டல் மனிதவளம் பற்றிய தென்மண்டல அளவிலான 2 நாள் கருத்தரங்கை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் துவக்கி வைத்தார்.

மனித வள மேம்பாடு மற்றும் தொழில்துறை உறவு மேம்பாடு, தொழிலாளர் மேம்பாடு ஆகிய துறைகளில் பணியாற்றும் மேலாளர்களின் கூட்டமைப்பான நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பர்சனல் மேனேஜ்மென்ட் சார்பில் கோவையில் 2 நாட்கள் நடக்கும் தென்மண்டல அளவிலான கருத்தரங்கம் இன்று தொடங்கியது. கோவை அவினாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.



இந்த கருத்தரங்கில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து மனிதவள மேம்பாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கூறியதாவது :- காவிரி தீர்ப்பு வந்தது மகிழ்ச்சி தான். ஆனாலும், இதில் வெற்றி தோல்வி என்பது இல்லை. காவிரி வழக்கில் இந்த தீர்ப்பு வருவதற்கு காரணம் அம்மா தான். அவர் தான் காவிரி பிரச்சனையில் போராடி தீர்வு கிடைக்காது, சட்ட ரீதியாக நாடினால்தான் தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்கும் என நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதனால்தான் தற்போது தீர்ப்பு வந்து உள்ளது, எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கீழடி அகழ்வாரய்ச்சியில் எதிர்பார்த்ததை விட ஏராளமான பொருட்கள் கிடைத்து வருகிறது. கீழடியில் அகழ்வு வைப்பகம் உருவாக்க தமிழக அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.

Video: M.Balaji

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...