கோவையில் தாக்கப்பட்ட தினகரன் ஆதரவாளர்கள் 56 பேருக்கு 31-ம் தேதி வரை சிறை

கோவை : வடவள்ளி பகுதியில் அ.தி.மு.க., அ.ம.மு.க., ஆகிய கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் அ.ம.மு.க.,வினர் 56 பேரை வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை : வடவள்ளி பகுதியில் அ.தி.மு.க., அ.ம.மு.க., ஆகிய கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் அ.ம.மு.க.,வினர் 56 பேரை வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 



நேற்று முன்தினம் வடவள்ளி பகுதியில் இரு கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மோதலில் தினகரன் ஆதரவாளர்கள் 56 பேர் மீது போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல், பொதுமக்களைத் தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது. 



இந்த புகாரின் அடிப்படையில், மேலும் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நேற்று நீதிமன்றத்தில் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி கண்ணன் 56 பேரையும் வரும் 31-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.



Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...