நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா

பெங்களூர் : நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் எடியூரப்பா தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூர் : நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் எடியூரப்பா தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவிற்கு நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 15-ம் தேதி வெளியாகின. இதில் பா.ஜ.க., 104 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 78 தொகுதிகளிலும்,  ம.ஜ.த., 38 தொகுதிகளிலும் வென்றன. இதர பிரிவில், 2 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ஜ.க.,வை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா. 

இதையடுத்து கடந்த 17-ம் தேதி எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க., ஆட்சி அமைந்தது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் தந்தார் ஆளுநர். ஆனால் காங்கிரஸ் வழக்கு தொடரவே, அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் ரிசார்ட்டுகளில் பத்திரமாக உள்ளனர். 

காங்கிரசில் இரு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே மதியம் வரை சட்டசபைக்கு வரவில்லை. அவர்கள் ஒரு வேளை சட்டசபை வராவிட்டாலும் கூட பா.ஜ.க., நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல முடியாது. எனவே ஒரு வேளை பா.ஜ.க., நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், எடியூரப்பா தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அவர் ஏற்கனவே ஷிமோகா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இருப்பினும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறாவிட்டால் எம்.எல்.ஏ., பதவியையும் அவர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல் தற்போது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...