தேனீகளை வளர்த்து வருமானத்தை உயர்த்துங்கள்..!

கோவை: உலக தேனீ தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் தேனீ தினம் கொண்டாடப்பட்டது.


கோவை: உலக தேனீ தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் தேனீ தினம் கொண்டாடப்பட்டது. 



ஆண்டுதோறும் மே மாதம் 19-ம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பூச்சியியல் துறை சார்பில் இன்று மற்றும் நாளை தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. 



இந்த விழாவில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தேனீ வளர்ப்பவர்கள் கலந்து கொண்டு, தேனீ பெட்டிகள், வளர்ப்பு உபகரணங்கள் மற்றும் தேன் கொண்டு தயாரித்து பல்வேறு உணவுப் பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். 



இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மைய தலைவர் ராமராஜு தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், "தேனீகள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. 



தேனீகள் இல்லாத ஒரு உலகத்தை நாம் கற்பனை செய்ய முடியாது. விவசாயிகள் தேனீகளை வளர்க்கலாம். இது கூடுதலாக லாபத்தை அளிப்பதோடு, விளைச்சலையும் அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி தேனீ வளர்ப்பு முறை குறித்து வேளாண் பல்கலை., சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்." என்றார்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...