கல்லாறு அருகே காணப்பட்ட அரியவகை பட்டாம்பூச்சி ; 'நீலகிரி நீலி'

கோவை: அரியவகை பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்றான நீலகிரி நீலி என்ற வகையை கல்லூரி மாணவர் ஒருவர் படம் பிடித்துள்ளார்.


கோவை : அரியவகை பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்றான நீலகிரி நீலி என்ற வகையை கல்லூரி மாணவர் ஒருவர் படம் பிடித்துள்ளார். 

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் நீலகிரி நீலி என்ற பட்டாம்பூச்சி ஒரு அறிய வகை பட்டாம்பூச்சி இனமாக உள்ளது. அதிக தூரம் பயணிக்காத குணம் கொண்டவை இந்த பட்டாம்பூச்சிகள். பெரும்பாலும் மரத்தின் மேற்பரப்புகளில் வாழும் இந்த வகை பட்டாம்பூச்சி மனிதர்களின் கண்களுக்கு அகப்படாது. இந்த நிலையில், பட்டாம்பூச்சிகளின் மீது ஆர்வமுடைய லெனின் டேனி ராஜ் என்பவர் கல்லாறு அருகே இந்த பட்டாம்பூச்சியை புகைப்படம் எடுத்துள்ளார்.  

இது குறித்து, 'ஆக்ட் ஆஃப் பட்டர்பிளை' என்ற அமைப்பின் நிறுவனர் மோகன் பிரசாத் கூறுகையில், "நீலகிரி நீலி-யை கடந்த 2013-ம் ஆண்டு கல்லாறு அருகே பார்த்தோம். பிறகு இப்போது தான் அகப்பட்டுள்ளது. அபூர்வமான இந்த பட்டாம்பூச்சியை பார்ப்பது அரியது." என்றார்.



இந்த பட்டாம்பூச்சி இனம் கடந்த 1883-ம் ஆண்டு நீலகிரி மலைப் பகுதிகளில் முதன் முறையாக காணப்பட்டது. 

நீலகிரி நீலி-யை புகைப்படம் எடுத்த லெனின் டேனி ராஜ் இத்தகைய அரியவகை பட்டாம்பூச்சியை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.  உணர்கிறேன்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...