கொத்து கொத்தாக செத்து மடிந்த மீன்கள்: குளத்து நீரில் கழிவுநீர் கலப்பதால் நேரும் அவலம்

கோவை: கோவையை அடுத்த சூலூர் பெரியகுளத்தில் கழிவுநீர் கலப்பதால், 5 டன் எடை அளவுள்ள மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையை அடுத்த சூலூர் பெரியகுளத்தில் கழிவுநீர் கலப்பதால், 5 டன் எடை அளவுள்ள மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் பகுதியில் உள்ள பெரியகுளம் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், படகு இல்லமும் உள்ளது. இந்தக் குளத்தில் கழிவுநீர் கலந்து வருவதாகத் தொடர்ந்து பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதாகக் குள குத்தகையாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அங்கு சென்று பார்த்த போது, 5 டன் எடை கொண்ட அளவு மீன்கள் செத்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.



குளத்தில் இருக்கும் நீரை அருகில் இருக்கும் குடியிருப்புவாசிகள் திருடுவதாகவும், மேலும், அவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலப்பதன் காரணமாக மீன்கள் செத்து மடிந்ததாகவும் குத்தகையாளர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், குளத்து நீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...