3 மணிநேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் 200 கி.மீ கடந்து கொண்டு வரப்பட்ட உடலுறுப்பு: வெற்றிகரமாக நோயாளிக்கு பொருத்தி சாதனை

கோவை: மதுரையிலிருந்து 3 மணி நேரத்தில் சாலை வழியாகக் கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட கல்லீரல், வெற்றிகரமாக நோயாளிக்குப் பொருத்தப்பட்டது.

கோவை: மதுரையிலிருந்து 3 மணி நேரத்தில் சாலை வழியாகக் கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட கல்லீரல், வெற்றிகரமாக நோயாளிக்குப் பொருத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வந்த செல்வி (45) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த 13-ம் தேதி கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், செல்விக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி 18-ம் தேதியன்று மூளை சாவு ஏற்பட்டது. இந்த நிலையில், அவரது குடும்பத்தினர் செல்வியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

இதையடுத்து, மறுநாள் காலை அவரது உடல் உறுப்புகளில் ஒரு பகுதியான கல்லீரல், மதுரையிலிருந்து சாலை வழியாக கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு சுமார் 3 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. அங்கு, கல்லீரல் தேவைப்பட்ட நோயாளிக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. மதுரையிலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவிற்கு சாலை வழியாக உடல் உறுப்பினை கொண்டு வருவதற்கு ஏதுவாக, போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்ட போலீசார் மிகவும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்தனர்.

இதுகுறித்து, கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவரும், மருத்துவருமான நல்ல.ஜி. பழனிசாமி கூறுகையில், "மதுரையிலிருந்து 3 மணி நேரத்தில் உறுப்பினை கொண்டு வருவது சாத்தியம் அல்ல. ஆனால், காவல்துறை உதவியுடன் இது சாத்தியமாகி உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்ட காவல்துறையினருக்கும், உடல் உறுப்புகளைத் தானமாக தர முன்வந்த செல்வியின் குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," எனக் கூறினார்.



Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...