பிரிக்கால் நிர்வாகத்தை கண்டித்து குழந்தைகளுடன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவையில் உள்ள (பிரிக்கால்) தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தின் போக்கை கண்டித்து அதன் தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுடன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கோவையில் உள்ள (பிரிக்கால்) தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தின் போக்கை கண்டித்து அதன் தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுடன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரிக்கால் மின்சாதன உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், அந்த நிர்வாகம் கடந்த சில வருடங்களாக தொழிலாளர் விரோத போக்கை தொடர்ந்து கடைப்பிடிப்பதாக கூறி தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையானோர் அத்தொழிற்சாலையில் பணி புரிந்து வரும் நிலையில், பெரும்பான்மை இல்லாத சங்கமாக நிர்வாகம் மாற்ற முயல்வதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், விடுப்பு நாட்களுக்கான (ஈட்டாத விடுப்பு நாட்கள்) தொகையை நிர்வாகம் தர மறுப்பதாகவும், ஆண்டுதோறும் தந்த கல்வி உதவித்தொகை மற்றும் அலவன்ஸ் தொகையை சங்கத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை என்றும் கூறி தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுடன் ரேஸ்கோர்ஸ் தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தனியார் நிறுவன அதிகாரிகளுடன் அச்சங்கத்தை சேர்ந்தவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இன்று மாலை அடுத்தகட்ட பேச்சுவார்த்தை அழைத்ததையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். பேச்சு வார்த்தை வெற்றி பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடப் போவதாகவும், இல்லையேல் அடுத்தகட்ட ஆர்ப்பாட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.



Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...