சேலஞ்சர் துரைக்கு ஜூனியராக இருந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தற்போது அவரையே கைது செய்கிறார் - டி.டி.வி.தினகரன்

கோவை: அ.தி.மு.க.,வில் சேலஞ்சர் துரை போன்றவர்களுக்கு ஜூனியராக இருந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தற்போது அவர்களையே கைதுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: அ.தி.மு.க.,வில் சேலஞ்சர் துரை போன்றவர்களுக்கு ஜூனியராக இருந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தற்போது அவர்களையே கைதுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் கைது செய்யப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் 56 பேரை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று கோவை மத்திய சிறையில் சந்தித்தார்.



பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தூண்டுதலின் பேரிலே அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கோவை மாவட்ட செயலாளர் சேலஞ்சர் துரை உட்பட 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனங்களை உடைத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில், நடுநிலை தவறிய டி.எஸ்.பி.வேல்முருகன் தலைமையிலான காவல்துறை மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 56 பேரும் ஜாமினில் வந்தவுடன் எனது தலைமையில் தொண்டாமுத்தூரில் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்படும்.

ஜூனியர்

மக்கள் எங்கள் பக்கம் உள்ளதால் ஆளும் கட்சியினர் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். அதனால் தான் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க.,வில் சேலஞ்சர் துரை போன்றவர்களுக்கு ஜூனியராக இருந்த எஸ்.பி.வேலுமணி தற்போது அவர்களையே கைது செய்யத் துணிந்துள்ளார். கத்தி எடுத்தவன் கத்தியால் தான் அழிவான் என்பதை எஸ்.பி.வேலுமணி உணர்ந்துகொள்ள வேண்டும்.ஆர்.கே நகரில் நான் போட்டியிட்ட போது என் பின்னால் ஆட்டோவில் தொப்பியுடன் ஓட்டு கேட்டவர் தான் எஸ்.பி.வேலுமணி.

சசிகலா முன்பு மண்டி போட்டு வந்து பதவி ஏற்றவர் தான் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. மடியில் கணம் உள்ளதால் மத்திய அரசுக்கு பயந்து எங்களை வெளியேற்றினர். டெல்லியில் இருந்து உத்தரவு வந்தால் பழனிசாமி, மவுன சாமியாகத்தான் இருப்பார்.

பசுமை வழிச் சாலை

சேலம் - சென்னையிடையே 8 வழி பசுமை வழி சாலை அமைப்பது தேவையற்றது. இது தொடர்பாக அங்கு போராட்டம் நடத்த மக்கள் எங்களை அழைத்துள்ளனர். கர்நாடகத்தில் ஜனநாகய படுகொலை நடத்தப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளது. காவிரி பிரச்சனை இருப்பதால் தான் அங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் இதுவரை நான் வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் தமிழர்களின் உரிமையைப் பறிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Video: Laxman

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...