உதகை - கூடலூர் சாலையில் பேருந்து விபத்து: 18 பேர் படுகாயம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை - கூடலூர் சாலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை - கூடலூர் சாலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், உதகையில் உள்ள தனியார் கோவில் திருவிழாவிற்கு கடந்த 18-ம் தேதி ஆந்திரா, மகாராஷ்டிரா, அரியானா மாநிலத்திலிருந்து விழாவில் பங்கேற்க 100-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இன்று திருவிழா முடிந்த நிலையில், பேருந்து மூலம் அவர்களது ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள 9வது மைல் பகுதியில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



இதில், பேருந்தில் இருந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் பயணித்த நிலையில், சுமார் 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 2 பேரின் நிலை கவலைக்கிடம் என்பதால், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோடை சீசன் சமயத்தில் இந்த விபத்து நடைபெற்றதால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...