ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடைக்கால கணக்கெடுப்புப் பணி இன்று தொடக்கம்

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோடைக்கால வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி இன்று முதல் தொடங்கி 8 நாட்கள் நடக்கிறது.

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோடைக்கால வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி இன்று முதல் தொடங்கி 8 நாட்கள் நடக்கிறது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி, உடுமலை மற்றும் அமராவதி ஆகிய ஆறு வனச்சரகங்கள் உள்ளன. இங்கு, யானை, சிறுத்தை, புலி, புள்ளிமான், கடமான் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வசிக்கின்றன. வனப்பகுதியில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு இருமுறை வனத்துறையினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்., மே மாதங்களில் இப்பணி நடைபெறுகிறது. 

இந்த நிலையில், கோடைக்கால வனஉயிரினங்கள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது. வரும் 28-ம் தேதி வரை என 8 நாட்கள் நடக்கும் இப்பணியில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட வனத்துறையினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். முதல்நாளான இன்று புலி, சிறுத்தை, கரடி மற்றும் செந்நாயின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிற நாட்களில் புலிகள் வேட்டையாடும் உயிரினங்களின் அடிப்படையில் வன உயிரின கணக்கெடுப்பு நடக்கிறது. 

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...