நீலகிரி வந்த ஆளுநருக்கு உற்சாக வரவேற்பு: உதகை மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்கிறார்

நீலகிரி: உதகை மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக நீலகிரிக்கு வருகை தந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வரவேற்றார்.

நீலகிரி: உதகை மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக நீலகிரிக்கு வருகை தந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வரவேற்றார்.

சென்னையிலிருந்து கோவை வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கார் மூலம் உதகை சென்றார். அவரை நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோர் வரவேற்றனர். உதகை தாவரவியல் பூங்கா அருகே இருக்கும் ராஜ்பவனில் தங்கும் அவர், நாளை மாலை 3.45 மணிக்கு நடக்கும் 122-வது மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்கிறார். அப்போது, மலர் கண்காட்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.

ஜூன் 2-ம் தேதி வரை உதகையில் தங்கும் ஆளுநர், பல்வேறு சுற்றுலா தளங்களைப் பார்வையிட்ட பிறகு, மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்கிறார். ஆளுநரின் இந்த வருகையையொட்டி, நீலகிரி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...