நூற்றாண்டு காலத்தின் உச்சம் ; கோவையில் கொட்டி தீர்த்த கோடை மழை

கோவை : கோவையில் நூறாண்டுகளில் இல்லாத அளவிற்கு கோடை காலத்தில் 285 மி.மீ., மழை பெய்துள்ளது என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


கோவை : கோவையில் நூறாண்டுகளில் இல்லாத அளவிற்கு கோடை காலத்தில் 285 மி.மீ., மழை பெய்துள்ளது என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.



கோடை மழையின் தாக்கத்தால் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் மரங்கள், செடிகள் என அனைத்து வகை தாவரங்களும் பச்சை பசேல் எனக் காட்சியளிக்கிறது. காட்டு தீ என சொல்லக்கூடிய பேராபத்திலிருந்தும் மேற்குதொடர்ச்சி மலை தப்பியது. இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், "கோவையில் கோடை மழை 130 மி.மீ எதிர்பார்த்த நிலையில், 285 மி.மீ மழை தற்போது வரை பெய்துள்ளது. கோடை காலம் இன்னும் முடியவில்லை, எனவே மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நூற்றாண்டு கால வரலாற்றில் ஒர் உச்சம்.

பொதுவாக மே மாதம் அக்னி வெயிலில் 66 மி.மீ., மழை மட்டுமே பெய்யும். ஆனால், இந்தாண்டு மே மாதம் மட்டும் 232 மி.மீ மழை பெய்துள்ளது. 2015-ம் ஆண்டு கோடை மழை 260 மி.மீ பதிவாகியிருந்தது. அதன்பின், 2018-ம் ஆண்டு தற்போது வரை 285 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே காணப்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. வேளாண் பல்கலைக்கழக அறிவுரைப்படி, பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது வைத்திருந்ததால் அவர்களுக்கு மண் வளம் அதிகரித்துள்ளது.



மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் மரம், செடி, கொடி என அனைத்தும் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. கோடை காலத்தில் வரும் வழக்கமான பிரச்சினையான காட்டு தீ மற்றும் வன விலங்குகள் ஊருக்குள் வரும் பிரச்சினை மழை நீரினால் குறைந்துள்ளது. கோவையைப் பொருத்தவரை கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு குறைவாகவே வெயில் பதிவாகியுள்ளது. இன்று அதிகபட்சமாக 36.5 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் 23.5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் 4 முதல் 5 கி.மீ வேகம் வரை வீசி வருகிறது, இது அதிகரிக்க வாய்ப்புள்ளது," என்றார்.

"மழை நீரை வீணாக்காமல் கால்வாய்கள் தூர்வார வேண்டும். சாலையின் ஓரம் உள்ள பகுதிகளில் நீர் தேங்காதவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சாக்கடைகள் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். மரக்கிளைகள் மழையில் விழாமல் இருக்க அதனைத் தடுக்க வேண்டும், கொசு முட்டைகள் உற்பத்தியாகாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சமூக ஆர்வலர் அருள் ராஜ் தெரிவித்தார்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...