நீர்நிலைகளும், நிலத்தடிநீரும் மாசுபடுத்தப்படுவதை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

கோவை: கோவையில் உள்ள நீர்நிலைகளும், நிலத்தடி நீரும் மாசுபடுத்தப்படுதை தடுக்கக்கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் உள்ள நீர்நிலைகளும், நிலத்தடி நீரும் மாசுபடுத்தப்படுவதை தடுக்கக்கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உற்பத்தியாகும் நொய்யல், அம்பராம்பாளையம் உள்ளிட்ட ஆறுகளில் தொடர்ந்து சாயம் மற்றும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலக்கப்படுவதால், அதனை குடிநீருக்காக பயன்படுத்தும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நீர், நிலம், காற்று உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றை மீட்கக் கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், மக்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தும் நீரை பாதுகாக்கும் வகையில் தடுப்பணைகள் மற்றும் ஆற்றுப்படுகைகளில் கழிவுகள் மற்றும் மாசுகள் கொட்டப்படுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு வியாதிகளில் இருந்து மக்களை காக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



திருப்பூர்

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அக்கட்சியினர் மனு அளிக்கச் சென்றனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் மனுவின் சாராம்சம் குறித்து கேட்காமல் உதாசீனப்படுத்தும் வகையில் மனுவை வாங்கிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...