அரசு பள்ளி மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை : கோவை இளையதலைமுறை அமைப்பினர் வலியுறுத்தல்

கோவை: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை இளையதலைமுறை அமைப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்தனர்.

கோவை: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை இளையதலைமுறை அமைப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்தனர். 

இது தொடர்பாக அந்த அமைப்பினரின் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது :- 

அரசு பள்ளி மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை அளிக்க வேண்டும், என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை கடந்த 21-ம் தேதி இளையதலைமுறை சமூக விழிப்புணர்வு அமைப்பு சார்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோரை நேரில் சந்தித்து மனுவாக அளித்தோம். 

அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கை முடிவில் உள்ள சட்ட சிக்கல்களை பற்றியும் பள்ளி கல்வித்துறை விளக்கிய அமைச்சர்கள், இதற்குண்டான நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். 

மேலும், மருத்துவ கல்வித்துறை, வனத் துறை, மீன் வளத்துறை, கால்நடைத் துறை, மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோரின் செயலாளர்களை நேரில் சந்தித்து இந்த கோரிக்கை மனுவை அளித்தோம். அவர்கள், நாங்கள் அளித்த மனுவை அமைச்சர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்தனர். 

5 சதவீதம் மட்டுமே உள்ள அரசு கல்லூரிகளில் 90 சதவீத தனியார் பள்ளி மாணவர்களே இடம்பிடிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் மாதம் ரூ. 500-ஐ கூட கட்டணமாக செலுத்த முடியாத ஏழை மாணவர்களால் எவ்வாறு தனியார் கல்லூரிகளில் ரூ. 50,000 கட்டணம் கட்டி படிக்க முடியும்? இந்த கோரிக்கையை நிறைவேற்ற அனைவரும் அரசை வலியுறுத்த வேண்டுகிறோம். 

இவ்வாறு அந்த பேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...