10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் 97.18 சதவீதம்; நீலகிரி 95.20 சதவீதம் தேர்ச்சி

திருப்பூர்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் 97.18 சதவீதம் பேரும், நீலகிரி மாவட்டத்தில் 95.20 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருப்பூர்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் 97.18 சதவீதம் பேரும், நீலகிரி மாவட்டத்தில் 95.20 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தில்  94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 336 பள்ளிகளைச் சேர்ந்த 13,987 மாணவர்கள் மற்றும் 14,227 மாணவிகள் என மொத்தம் 28,214 பேர் பத்தாம் வகுப்பு தேர்வெழுதினர். இதில் 13,486 மாணவர்கள் மற்றும் 13,932 மாணவிகள் என 27,418 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் 97.06 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் 7-ஆம் இடத்தைப் பிடித்திருந்தது. இந்தாண்டு 97.18 சதவீதம் பெற்று தமிழகத்தில் அதே 7-வது இடத்தைத் தக்கவைத்துள்ளது.

நீலகிரி

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 95.20% சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 8,225 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 7,830 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மொத்தம் 2,745 பேர் தேர்வு எழுதினர். அதில், 2,487 பேர் தேர்ச்சி பெற்று, அரசுப் பள்ளிகளில் 90.60 சதவீதமாக தேர்ச்சி விகிதம் உள்ளது.



இந்த ஆண்டு 95.20 சதவீதம் தேர்ச்சி விகிதமாக உள்ள நிலையில், இது கடந்த ஆண்டை விட 0.11 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...