ஸ்டெர்லைட் விவகாரம்: கோவையில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மற்றும் மாநில அரசை கோவையில் அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மற்றும் மாநில அரசை கோவையில் அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அரசின் இந்த போக்கை தமிழகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவை டாட்டாபாத் பகுதியில், பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் மக்கள் அதிகாரம், த.பெ.தி.க., ம.தி.மு.க., வி.சி.க., புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "துப்பாக்கிச் சூடு என்பது திட்டமிட்ட படுகொலை. மான் சுட அனுமதி இல்லாத நாட்டில், மனிதனைச் சுட எப்படி அனுமதி கிடைத்தது? துப்பாக்கிச் சூடு என்பது திட்டமிட்ட படுகொலை. குழந்தைகளுடன் ஜனநாயக முறைப்படி போராடியவர்களை அரசே சுட்டுக் கொலை செய்துள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டும்." என்றனர்.



Video: Laxman

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...