ஸ்டெர்லைட் போராட்டம்: வ.உ.சி மைதானத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை: ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான போராட்டத்தை அடுத்து கோவை வ.உ.சி., மைதானத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை: ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான போராட்டத்தை அடுத்து கோவை வ.உ.சி., மைதானத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 



கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஸ்டெர்லைட்க்கு ஆதரவாகவும் மற்றும் காவல் துறையைக் கண்டித்தும் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த பகுதியான வ.உ.சி., மைதானத்தில் நேற்று மாணவர்கள் சிலர் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையை கண்டித்தும் பதாகைகளை ஏந்தி நின்றனர். அவர்களை கைது செய்த போலீசார் பின்னர், அவர்களை பிணையில் விடுவித்தனர்.

இந்த சூழலில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அந்த பகுதியில் போராட்டம் நடத்தக்கூடும் என்ற தகவல் வந்ததையடுத்து வ.உ.சி., மைதானம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் சிறப்பு காவல் ஆய்வாளர், காவலர் மற்றும் உர்க்காவல் படையினர் என்று 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வழியே செல்லும் வாகனங்களையும் போலீசார் சோதனைகள் செய்து வருகின்றனர்.



Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...