தூத்துக்குடி கலவரம்: நீலகிரி பயணத்தை நிறைவு செய்து சென்னை புறப்பட்டார் ஆளுநர்

நீலகிரி: தூத்துக்குடியில் 2-வது நாளாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், நீலகிரியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாலை சென்னை புறப்பட்டார்.

நீலகிரி: தூத்துக்குடியில் 2-வது நாளாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், நீலகிரியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாலை சென்னை புறப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் கலந்துக் கொள்ள கடந்த 21-ம் தேதி மாலை உதகைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் பங்கேற்ற ஆளுநர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து வரும் ஜுன் 2-ம் தேதி வரை உதகையில் தங்கியிருந்து பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் தனியார் விழாவில் பங்கேற்க ஆளுநர் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், தூத்துக்குடியில் நேற்று நடந்த கலவரம் 2-வது நாளாக இன்றும் நீடித்தது. இந்த சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் வலுத்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை ஆளுநர் தனது குடும்பத்தாருடன் உதகை ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் ஆகிய சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தார். தூத்துக்குடியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், ஆளுநர் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனிடையே, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் இருந்து கோத்தகிரி வழியாக கார் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.



Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...