ராணுவ பணித்தேர்வு: முன்னாள் வீரர்களின் சிறார்களுக்கு இணையதளம் மூலம் பயிற்சி வகுப்பு

ராணுவப் பணித்தேர்வுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ள முன்னாள் வீரர்களின் சிறார்களுக்கு இணையதளம் மூலம் வழங்கப்படும் பயிற்சி வகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவப் பணித்தேர்வுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ள முன்னாள் வீரர்களின் சிறார்களுக்கு இணையதளம் மூலம் வழங்கப்படும் பயிற்சி வகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பொதுத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகளின்படி படைப்பணியில் அலுவலராக நியமனம் பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, மத்திய பணியாளர் தேர்வாணையத்தினரால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த ராணுவ பணித்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகளில் கலந்து கொள்ள முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு இணையதளம் மூலம் 6 மாத கால பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான, இணையதள முகவரி www.exweletutor.com ஆகும்.

எனவே, இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் முன்னாள் படைவீரர்களின் சார்ந்தோர்கள் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி உரிய சான்று பெற்று விண்ணப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு தொழிற்கல்வி, மருத்துவப்படிப்பு, தொழில்நுட்பக் கல்வி, கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் படிப்புகளுக்கு கல்லூரியில் சேருவதற்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...