யூடிஎஸ் மொபைல் செயலி மூலம் ரயில் டிக்கெட்டுகளை வாங்குபவர்களுக்கு சலுகை

கோவை: முன்பதிவில்லாத சீசன் மற்றும் பிளாட் பாரம் டிக்கெட்டுகளை யூடிஎஸ் செயலியின் மூலம் வாங்குபவர்களுக்கு 5 சதவீத போனஸை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை: முன்பதிவில்லாத சீசன் மற்றும் பிளாட் பாரம் டிக்கெட்டுகளை யூடிஎஸ் செயலியின் மூலம் வாங்குபவர்களுக்கு 5 சதவீத போனஸை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆபரேஷன் ஐந்து நிமிடங்கள்' என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரயில்வேயில் சீசன், முன்பதிவில்லாத மற்றும் பிளாட்பாரம் டிக்கெட்டுகளை பெற யூடிஎஸ் என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம், ரயில் நிலையங்களில் 25 மீட்டர் சுற்றளவில், 5 நிமிடங்களில் பயணிகள் தங்கள் மொபைல் போனில், பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக, 'யூடிஎஸ்' மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், 'ஜிபிஎஸ்' முறை மூலம் ரயில்வேயில் பணம் செலுத்தும் சிறப்பு ஆப் 'ஆர்-வேலட்' பயன்படுத்தினால், கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது. இந்த இ-வேலட்டை எந்த ரயில் நிலையத்திலுள்ள புக்கிங் சென்டரிலும் அல்லது ஐ.ஆர்.சி.டி.சி., இணையத்தில் டாப் அப் செய்யலாம். இத்திட்டத்தில் அச்சிடப்பட்ட டிக்கெட் ஏதும் தேவையில்லை. பயணிகள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யப்படும் டிக்கெட், எஸ்.எம்.எஸ்., உள்ளிட்ட எந்த முறையிலும், வேறு மொபைல் போனுக்கு மாற்ற முடியாது. பயணிகள் அச்சிடப்பட்ட டிக்கெட் இல்லாமல், விரைவாகப் பயணிக்க பெரிதும் பயன்படும்.

இந்த நிலையில், டிஜிட்டல் திட்டத்தைப் பிரபலப்படுத்துவதற்காகவும், மொபைல் புக்கிங்கை ஊக்குவிப்பதற்காகவும் ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு ஒரு சலுகையை அறிவித்துள்ளது. அதாவது, ஆர்-வேலட்டில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 5 சதவீதம் போனஸ் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்-வேலட்டிற்கு ரூ. 1,000-க்கு ரீசார்ஜ் செய்தால், ரூ. 1,050 வழங்கப்படும். இந்தத் திட்டம் நாளை (மே 24) முதல் 3 மாதங்களுக்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...