ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுமி: மகளை மீட்கப் போராடிய தாய் மருத்துவமனையில் அனுமதி

திருப்பூர்: திருப்பூர் அருகே ஏரியில் சிக்கி சிறுமி உயிரிழந்த நிலையில், அவரை மீட்கப் போராடிய தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர்: திருப்பூர் அருகே ஏரியில் சிக்கி சிறுமி உயிரிழந்த நிலையில், அவரை மீட்கப் போராடிய தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெருமாநல்லூர் பட்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி ராமசாமி, ரோஷி தம்பதியினருக்கு பவித்ரதர்ஷினி (9), மற்றும் வைஷாலி (8) ஆகிய இரு மகள்கள் இருந்தனர். இந்நிலையில், ராமசாமி வேலைக்கு சென்றிருந்தார். இதனால், ரோஷி தனது இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள ஏரியில் கால் கழுவச் சென்றுள்ளார். அந்த சமயம், பவித்ரதர்ஷினி எதிர்பாராதவிதமாக, சேற்றில் சிக்கிக் கொண்டார்.

மகள் சேற்றில் சிக்கிக் கொண்டதை பார்த்த தாய் ரோஷி, சிறுமியை மீட்க முயன்றார். அப்போது, அவரும் சேற்றில் மாட்டிக் கொண்டார். இதனால், பயந்து போய் மற்றொரு மகளான வைஷாலி கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்த ரோஷியை மீட்டனர். ஆனால், சேற்றின் அழுத்தத்தால் சிறுமி பவித்ரதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், சேற்றில் சிக்கி உயிரிழந்த பவித்ரதர்ஷினியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரோஷிக்கு அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...