ஜூலை 20 முதல் தமிழகத்தில் 15 லட்சம் லாரிகள் இயங்காது

கோவை: டீசல் விலை உயர்வு சுங்க வரி கட்டணம் உயர்வு, காப்பீடு விலை உயர்வு போன்றவற்றை குறைக்கக் கோரி வரும் ஜூலை மாதம் 20 தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கோவை: டீசல் விலை உயர்வு சுங்க வரி கட்டணம் உயர்வு, காப்பீடு விலை உயர்வு போன்றவற்றை குறைக்கக் கோரி வரும் ஜூலை மாதம் 20 தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் இணை செயலாளர் கே.எஸ். கலியபெருமாள் கூறுகையில், "நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகும் டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதே நேரம் ஆறு மாத காலத்திற்கு ஒரு முறை சுங்க வரி கட்டணமும் உயர்கிறது. காப்பீடு நிறுவனங்களும் விலைகளை உயர்த்தியுள்ளன. இது போன்று அனைத்து வகை கட்டணங்களும் உயர்ந்துள்ளதால், லாரிகளை இயக்க முடியாமல் சுமார் 25 சதவீதம் பேர் இந்த தொழிலை விட்டே சென்று விட்டனர்.

லாரிகள் சீராக இயங்கி இந்தியா முழுவதும் பொருட்களை கொண்டு போய் சேர்த்தால் தான் இந்தியாவின் பொருளாதாரம் சீராக இருக்கும். லாரி வாடகை உயர்த்தினால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயரும். அண்டை மாநிலமான கார்நாடகவில் டீசலுக்கான உள்ளூர் வரி ரூ. 3.50 குறைக்கப்பட்டுள்ளன. அதே போல் தமிழகத்திலும் இது குறைக்கப்பட வேண்டும்.

ஜூலை 20-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். சுமுகமான தீர்வு ஏற்பட்டால் போராட்டம் கைவிடப்படும், இல்லை என்றால் போராட்டம் தொடரும்." என்றார்.

கோவையில்

கோவையில் மட்டுமே சுமார் 5 லட்சம் லாரிகள் உள்ளூர் மற்றும் வெளியூர் வணிகங்களுக்கு இயக்கப்படுக்கின்றன. இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றால் லாரி தொழிலை நம்பியுள்ள ஓட்டுனர்கள், கிளினர்கள், கூலி தொழிலாளிகள் வேலை இன்றி பாதிக்கப்படுவார்கள்.

இது குறித்து லாரி ஒட்டுனர் மாரிமுத்து கூறுகையில், "லாரி ஒட்டுவதில் ஏற்கனவே மாதம் 15 நாட்கள் தான் வேலை உள்ளது. விலை வாசி உயர்வால் நாங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளோம். அது மட்டுமல்ல வேலை நிறுத்தம் தொடங்கினால் எங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படும்." என்றார்.

இது குறித்து சமூக ஆர்வலர் குப்புராஜ் கூறுகையில், "மக்களை பாதிக்கும் முன் லாரி உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்கனவே பெரும்பாலான பொருட்களில் விலை வாசி உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்." என்றார்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...