ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க நடவடிக்கை : உரிமையாளர் அனில் அகர்வால்

தூத்துக்குடி: சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் உரிமையாளர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி: சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் உரிமையாளர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு, மாவட்டமே போர்க்களம் போல காட்சியளித்து வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடியில் துரதிருஷ்டவசமாக நடைபெற்ற சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன என்று ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கலவரத்தில் காயமடைந்த அனைவருக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். 

மேலும், அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது :- ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. ஆலையை மீண்டும் இயக்க நீதிமன்றம், மத்திய மாநில அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். தூத்துக்குடி மக்களின் நலன், விருப்பத்தின் பேரில் ஆலையை இயக்க விரும்புகிறேன். தூத்துக்குடி சம்பவம் மனதிற்கு வலியை ஏற்படுத்தக் கூடியதாக உள்ள. மேலும், சட்டங்களுக்கு உட்பட்டு ஆலையை இயக்கப்படும். சுற்றுசூழல் பாதிக்காத வகையில் ஆலையை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...