தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம்: கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது

கோவை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.


கோவை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர். 



தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு இதுவரை 13 பேர் உயிரிழந்தனர். மேலும், அங்கு போலீசார் 3-வது நாளாக குவிக்கப்பட்டனர். இதனால், தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

பொதுமக்களை சுட்டுக் கொன்ற போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு தமிழகம் முழுவதும் போராட்டங்களும், மறியல்களும் நடைபெற்று வருகின்றன. எனவே, ஜல்லிக்கட்டுப் போராட்டம் தீவிரமடைந்த பகுதிகளான கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், மாணவர்கள் சிலர் கோவை வ.உ.சி. மைதானத்தில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மக்களின் நலனைக் கெடுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், போலீசாரால் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என அவர் கோசங்களை எழுப்பினர். பின்னர், போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். போராட்டங்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வ.உ.சி., மைதானத்தில் ஏற்கனவே போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த திடீர் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...