கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை: தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, முத்தணன் குளம், உக்கடம் பெரியகுளம், நரசம்பதி, செல்வ சிந்தாமணி, வாலாங்குளம், சிங்காநல்லுார் ஆகிய எட்டு குளங்கள் மாநகராட்சி பராமரிப்பில் உள்ளன. இந்த நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு  அமைப்பின் சார்பில் தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளனவா..? என்பது குறித்து மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில்  அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, செல்வ சிந்தாமணி  குளத்திலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது.



இந்த ஆய்வில் மாநகராட்சி செயற்பொறியாளர் லட்சுமணன், கோவை மாநகர ஸ்மார்ட் சிட்டி கன்சல்டன்சியைச் சார்ந்த சுபாஷ், கோபாலகிருஷ்ணன், ராக் அமைப்பின் ரவீந்திரன் மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரும் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் போது, குளங்களில் இருந்து நீர் செல்லும் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், அடைப்புகளையும் விரைவில் சரி செய்து தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர்.



Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...