'மேகுனு' புயல் தீவிரமடைந்து வருவதால் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

அரபிக் கடலில் 'மேகுனு' புயல் தீவிரமடைந்து வருவதால் கர்நாடகம், கேரளா மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் 'மேகுனு' புயல் தீவிரமடைந்து வருவதால் கர்நாடகம், கேரளா மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் உருவான 'மேகுனு' புயல் மிக தீவிர புயலாக மாறியுள்ளது. இது, மத்திய அரபி கடல் பகுதியில் இருந்து, தெற்கு ஓமன் மற்றும் வடக்கு ஏமனை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் வரும் நாளை மறுநாள் (மே 26) ஓமன் மற்றும் ஏமன் நாடுகளுக்கு இடையில் கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்தப் புயல் காரணமாக அரபிக்கடலில் சூறாவளி காற்று வீசுகிறது. இன்று மணிக்கு 160 முதல் 170 கி.மீ., வேகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.

மேகுனு' புயல் தீவிரமடைந்து வருவதால் கர்நாடகம், கேரளா மற்றும் லட்சத்தீவு, அந்தமான், நிகோபார் தீவுகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடல் கொந்தளிப்பாக காணப்படும். எனவே, தமிழக மீனவர்கள் 26-ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிக்குள், மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே, இந்திய கடற்பகுதியில் நேற்று துவங்குவதாக இருந்த தென் மேற்கு பருவமழை, புயல் காரணமாக தாமதமாகியுள்ளது. நேற்று முதல், பருவமழை துவங்குவதற்கு சாதகமான சூழல் தெரிவதால், இன்னும் இரண்டு நாட்களில் பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுவரை, சில இடங்களில் லேசான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் சில பகுதிகளில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...