கோவை பிரிக்கால் நிறுவனத்திற்கு மத்திய அரசின் விருது

கோவை: சர்வதேச வாகன சந்தையில் சிறந்து விளங்கிய கோவையைச் சேர்ந்த பிரிக்கால் நிறுவனத்திற்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.


கோவை: சர்வதேச வாகன சந்தையில் சிறந்து விளங்கிய கோவையைச் சேர்ந்த பிரிக்கால் நிறுவனத்திற்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

2016-2017-ம் ஆண்டில் தொழிற்சாலைகளுக்கான உறவில் சிறந்து விளங்கிய நிறுவனத்திற்கு மத்திய அரசின் விருது பெறுவதற்கான தேர்வு நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் 22 நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில், இணக்கமான தொழில்துறைகளை வளர்ப்பதற்கு புதுமையான அணுகுமுறைகள், மனித இழப்புகள் தவிர்த்தல், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்தித்திறன் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைகளைக் கொண்டு சிறந்த நிறுவனத்திற்கான தேர்வு நடைபெற்றது.

கடைசியில், 14 நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டு, கோவையைச் சேர்ந்த பிரிக்கால் நிறுவனத்திற்கு மத்திய அரசின் இந்த விருது வழங்கப்பட்டது. இதனை மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கெங்வார் வழங்கினார்.

விருது பெற்றது தொடர்பாக பிரிக்கால் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆர். மலர்வண்ணன் கூறுகையில், "தொழிலாளர்களிடையே முற்போக்கு சிந்தனை மற்றும் கடின உழைப்பை உருவாக்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. சிறந்த நிர்வாகம், தொழிலாளர்களின் கடின உழைப்பே இந்த விருதை வெல்ல முக்கியக் காரணம். எனவே, எங்களது தொழிலாளர்கள் மற்றும் அவர்களது கடின உழைப்புகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," எனக் கூறினார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...