முடங்கியது தொழில்நகரமான திருப்பூர் : ரூ. 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர்: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும் திருப்பூரில் நடைபெற்று வரும் முழுஅடைப்பு போராட்டத்தால் ரூ. 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும் திருப்பூரில் நடைபெற்று வரும் முழுஅடைப்பு போராட்டத்தால் ரூ. 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 



தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, திருப்பூரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 99 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதோடு, அங்குள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த பிரின்டிங், டையிங், காம்பாக்டிங் உள்ளிட்ட நிறுவனங்களும் இயங்கவில்லை. அதேபோல, சிறு, குறு பின்னலாடை நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. 

மாவட்டம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாததால், சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல செயல்படுகின்றன. இதனிடையே, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இதேபோல, சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டம் உதகையில் 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கூடலூரில் நூறு சதவீத கடைகளும், குன்னூர், கோத்தகிரியில் 80 சதவீதம் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.



Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...