கோவை காந்திபுரம் பகுதியில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் 100-க்கும் மேற்பட்டோர் கைது

கோவை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து கோவை காந்திபுரம் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து கோவை காந்திபுரம் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 



தமிழகம் முழுவதும் தி.மு.க., தலைமையிலான எதிர்கட்சிகளின் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து கோவை காந்திபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 



மேலும், காந்திபுரம் பகுதியில் ஊர்வலமாக சென்ற அவர்கள், மாநகரப் பேருந்து நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோசங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்தனர். இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே, தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

ஸ்டாலின் மீதான இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ்மணி தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல, வடகோவையில் மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையிலும், ஆவாரம்பாளையத்தில் வட்ட செயலாளர் மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற சுமார் 300-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.



Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...