இரு காதலிகளை ஒரே நேரத்தில் மணக்கும் ரொனால்டினோ

கால்பந்து உலகில் கொடிகட்டிப் பறந்தவர்களில் ஒருவரான பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ ஒரே நேரத்தில் தனது 2 காதலிகளையும் திருமணம் செய்ய உள்ளார்.

கால்பந்து உலகில் கொடிகட்டிப் பறந்தவர்களில் ஒருவரான பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ ஒரே நேரத்தில் தனது 2 காதலிகளையும் திருமணம் செய்ய உள்ளார். 

பிரேசில் நாட்டுக் கால்பந்து அணிக்காக விளையாடியவர் உலகப் புகழ்பெற்ற ரொனால்டினோ (38). பிரேசில் அணிக்காக 97 சர்வதேசப் போட்டிகளில் 33 கோல்களை அடித்துள்ளார். இரண்டு முறை உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2002-ல் பிரேசில் உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். ஃபிபாவின் மிகச் சிறந்த வீரர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். புகழ்பெற்ற ஜெர்மியோ, பி.எஸ்.ஜி., பார்சிலோனா கிளப் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். கிளப் அணிகளுக்காக 441 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 167 கோல்களையும் அடித்துள்ளார்.

இந்த நிலையில், பிரிசிலா கோயல்ஹோ மற்றும் பீட்ரிஸ் சௌசா ஆகிய இரண்டு பேரை அவர் காதலித்து வந்தார். சௌசாவுடன் 2016-ல் இருந்து பழகத் தொடங்கினார். ஆனால், அதற்கு முன்பே கோயல்ஹோவுடன் பழகி வந்தார். இருவருடனான நட்பையும் ஒரே நேரத்தில் தொடர்ந்து வந்துள்ளார். கடந்தாண்டு ஜனவரியில், தன்னுடைய காதலை இருவரிடம் கூறியுள்ளார். இருவருடனும் அவர் மோதிரம் மாற்றிக் கொண்டார். ரியோடிஜெனிரோவில் உள்ள தனது வீட்டில் இரண்டு காதலிகளுடன் கடந்தாண்டு டிசம்பரில் குடியேறினார். 

இதனிடையே, வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரொனால்டினோ கூறியிருந்தார். இவர்களில் யாரை அவர் திருமணம் செய்வார் என்று பட்டிமன்றம் நடந்து வந்தது. ஆனால், இருவரையுமே அவர் திருமணம் செய்யப் போவதாக பிரேசில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இருவருக்கும் ஒரே மாதிரியான பரிசுப் பொருட்களை ரொனால்டினோ வாங்கி குவித்து வருகிறார்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...