தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்த செல்வசேகரின் உடலுக்கு பிரேத பரிசோதனை

தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான செல்வசேகரின் உடல் நீதிபதிகளின் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான செல்வசேகரின் உடல் நீதிபதிகளின் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அப்பாவி மக்கள் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்ட நீதிபதிகள் 4 பேர் முன்னிலையில், 6 மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். இதனிடையே, மருத்துவமனை வளாகத்தை சூழ்ந்திருந்த பொதுமக்களை லேசான தடியடி நடத்தியே போலீசார் விரட்டியடித்தனர்.

பொதுவாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்தான் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகளைக் காரணமாக வைத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்குப் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த செல்வசேகர் என்பவரின் உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 3 நீதிபதிகள் முன்னிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த பிறகு, பதப்படுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...