கத்திமுனையில் காரை கடத்திச் சென்ற கொள்ளையனுக்கு வலைவீச்சு

கோவை: கோவை கொடிசியா மைதானம் அருகே நின்று கொண்டிருந்த காரை கத்திமுனையில் கடத்திச் சென்ற கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை: கோவை கொடிசியா மைதானம் அருகே நின்று கொண்டிருந்த காரை கத்திமுனையில் கடத்திச் சென்ற கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காளப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மகன் ஜெயப்பிரகாஷ். இவர், கொடிசியா பகுதியில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு உள்ளே அமர்ந்து இருந்தார். அப்போது, ஜெயப்பிரகாசை நோட்டமிட்டு வந்த மர்மநபர், கத்திமுனையில் அவரிடமிருந்து மாருதி சிப்ட் கார், 2 செல்போன்கள் மற்றும் ரூ. 1,500 ரொக்கத்தையும் அபகரித்துச் சென்றுள்ளான்.

கோவை அவிநாசி சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகிறது. அதே போல காலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் இந்த பிரதான சாலையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பட்டப்பகலில் கத்திமுனையில் நடைபெற்றுள்ள இந்த துணிகர சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். அதேபோல, அவினாசி சாலையில் சிக்னல்களில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...