60-வது பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இன்று தொடங்கியது

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெறக் கூடிய 60-வது குன்னூர் பழக்கண்காட்சி இன்று தொடங்கியது.


நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெறக் கூடிய 60-வது குன்னூர் பழக்கண்காட்சி இன்று தொடங்கியது.



குன்னுார் சிம்ஸ்பூங்காவில் 60-வது ஆண்டு பழக்கண்காட்சி இன்று தொடங்கி நாளை நிறைவு பெறுகிறது. நுழைவாயிலில் 60-வது பழக்கண்காட்சி என்ற வடிவமைப்பு 12 அடி உயரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 



பூங்காவினுள் ஒரு மெட்ரி டன் எடை கொண்ட கருப்பு மற்றும் பச்சை திராட்சைகளால் உருவாக்கப்பட்ட 9 அடியில் யானை, 6 அடியில் குட்டியானை சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.



அதுமட்டுமின்றி, மேடை அரங்கு அருகே சுற்றுலா பயணிகள் அனைவரும், 'செல்பி' எடுக்கும் வகையில் பழங்களால் ஆன ரங்கோலி வடிவமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு டன் வரையில் திராட்சை, பலா, பப்ளிமஸ், ஆரஞ்ச் மற்றும் சாத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 



கன்னியாகுமரி, திருச்சி, கடலுார், திருப்பூர், வேலுார் மாவட்டங்களைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., பாஸ்டியர் இன்ஸ்டிடியூட், இன்கோசர்வ், டான்டீ, தேன் விற்பனை, ரோஜா அரங்கு மற்றும் மகளிர் குழுக்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.



மேலும், 2,000 தொட்டிகளில் வளர்க்கப்பட்ட சால்வியா, பெகோனியா, பால்சம், ஜின்னியா உட்பட பல்வேறு வண்ண மலர்களும் ஆங்காங்கே சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த 60-வது பழக்கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் பி. செல்வராஜ் தொடங்கி வைத்தார். உடன் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் பலர் இருந்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...