மேட்டுப்பாளையத்தில் ராட்சத பலூனில் பறக்கும் சாகச விளையாட்டு தொடக்கம்: இயற்கையின் அழகை 'ஈகிள் வியூ' பார்வையில் கண்டுரசிக்க பொதுமக்கள் ஆர்வம்

மேட்டுப்பாளையம்: கோவை மேட்டுப்பாளையத்தில் இயற்கையின் அழகை கண்டுரசிக்கும் வகையில் தேசிய விளையாட்டு கழகம் சார்பில் ராட்சத பலூனில் பறக்கும் சாகச விளையாட்டு இன்று தொடங்கியது.


மேட்டுப்பாளையம்: கோவை மேட்டுப்பாளையத்தில் இயற்கையின் அழகை கண்டுரசிக்கும் வகையில் தேசிய விளையாட்டு கழகம் சார்பில் ராட்சத பலூனில் பறக்கும் சாகச விளையாட்டு இன்று தொடங்கியது.

மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய சாகச விளையாட்டு கழகத்தின் சார்பில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பலூன் மூலம் வானில் பறந்து செல்லும் சாகச விளையாட்டு நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதில், பங்கேற்று பலூனில் பறந்தபடி இயற்கை அழகை ரசிக்கப் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இளம் வயதினருக்கு, குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் மனதில் உள்ள தேவையற்ற அச்ச உணர்வைப் போக்கி, மனவலிமை கொண்டவர்களாக எந்த சூழலையும் எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களாக மாற்ற இது போன்ற சாகச விளையாட்டுக்கள் உதவும் என நம்பப்படுகிறது. எனவே, கடந்த பத்து ஆண்டுகளாக ஒவ்வொரு கோடை விடுமுறை காலங்களிலும் பலூன் மூலம் குறிப்பிட்ட உயரம் வரை வானில் பறந்து செல்லும் சாகச விளையாட்டு மேட்டுப்பாளையத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இயற்கை எழில் சூழ்ந்த நீலகிரி மலையடிவாரத்தில் உள்ள ஒரு தனியார் விளையாட்டு பூங்கா [பிளாக் தண்டர்] மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த சாகச விளையாட்டு இந்திய விமானப் படையின் பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகள் மேற்பார்வையில் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்திலேயே சீரான சீதோசனம் மற்றும் அளவான காற்று வீசும் பகுதிகளாக கருதப்படும் மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியில் மட்டுமே ஆண்டுதோறும் பலூன் திருவிழா மற்றும் பலூனில் பறக்கும் சாகச விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. மிகவும் பாதுகாப்பாக துறைச் சார்ந்த வல்லுநர்களால் நடத்தப்படுவதால், இந்த சாகச விளையாட்டில் பங்கேற்று இயற்கையின் அழகை ஈகிள் வியூ எனப்படும் கழுகுப் பார்வையில் காண சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...