பயணி மறந்து விட்டுச்சென்ற விலையுயர்ந்த பொருட்களை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

கோவை: கோவையில் ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவர் விட்டுச் சென்ற மடிக்கணினி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

கோவை: கோவையில் ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவர் விட்டுச் சென்ற மடிக்கணினி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர், சுமார் 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது ஆட்டோவில் மாணவர்கள் சிலர் கடந்த 24-ம் தேதி பயணித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இரவு வீடு திரும்பிய செல்வராஜின் ஆட்டோவில் இரண்டு பைகள் இருப்பதைக் கண்டுள்ளார். அப்போது, இரண்டையும் சோதனை செய்த போது ஒரு பையில் மடிக்கணினியும், மற்றொரு பையில் விலை உயர்ந்த கேமரா என சுமார் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்துள்ளது.



இது தொடர்பாக சி.ஐ.டி.யு., சங்கத்தில் தகவலை தெரிவித்த அவர், சங்க நிர்வாகிகளுடன் சேர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, கோவை மாநகர காவல் உதவி ஆணையாளர் (உளவு பிரிவு) சௌந்திரராஜனிடம் ஆட்டோ ஓட்டுநர் செல்வராஜ் பொருட்களை ஒப்படைத்து, உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு கூறினார். ஆட்டோ ஓட்டுநரின் இந்த செயலை போலீசார் வெகுவாக பாராட்டியதோடு, உடைமைகளை இழந்தவர்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...