தமிழகத்தில் மே 28-ம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை

கோவை: தமிழகத்தில் நாளை கோடை மழை முடிந்து, நாளை மறுநாள் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: தமிழகத்தில் நாளை கோடை மழை முடிந்து, நாளை மறுநாள் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் கூறியதாவது :- இந்தாண்டு தமிழகத்தில் 27 மாவட்டங்களில் சராசரியான தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அரியலூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருப்பூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சராசரிக்கும் குறைவான அளவே மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில் 772 மீ.மீ. மழை பெய்யும். குறைந்தபட்சம் தூத்துக்குடி மாவட்டத்தில் 60 மீ.மீ. மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மே மாதம் 28-ம் தேதி தொடங்கும் பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் வரை நீடிக்கும். 16 முதல் 17 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவையில் 213 மீ.மீ. மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது கடந்தாண்டு 301 மீ.மீ. மழை பெய்துள்ளது. 

தமிழகத்தில் 350 முதல் 360 மீ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளாவில் தொடங்கிய பருவமழை கன்னியாகுமரி வழியாக தமிழகத்தில் தொடங்கும். வேளாண் பெருமக்கள் முடிந்த அளவு மழை நீரை மரங்களுக்குப் பாத்திகட்டியும், பண்ணைக் குட்டைகளில் நீர் சென்றடையும்படி ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம், மழை நீரை சேமிக்க முடியும். நீர் நிலைகளுக்கு மழை நீர் சென்றடையும்படி நீர் வழி பாதைகள் சுத்தம் செய்து கொள்ள வேண்டும், என்றார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...