தொடர்ந்து மழையால் பாதிக்கப்படும் கூடைப்பந்து போட்டிகள்: உள்விளையாட்டு அரங்கம் அமைக்கக் கோரும் வீரர்கள்

கோவை: கோவையில் மழை போன்ற காரணங்களால் போட்டிகள் தடைப்படுவதால், திறந்தவெளி மைதானமாக இருக்கும் கூடைப்பந்து மைதானத்தை, உள்விளையாட்டு அரங்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கோவையில் மழை போன்ற காரணங்களால் போட்டிகள் தடைப்படுவதால், திறந்தவெளி மைதானமாக இருக்கும் கூடைப்பந்து மைதானத்தை, உள்விளையாட்டு அரங்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 53-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆண்களுக்கான போட்டிகள் மற்றும் பதினேழாவது சி.ஆர்.ஐ. பம்ப் கோப்பை பெண்களுக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் தலைசிறந்த 8 அணிகளான பஞ்சாப் போலீஸ், டெல்லி - இந்திய விமானப்படை,சென்னை - வருமான வரி அணி, சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ், டெல்லி இந்தியன் ரயில்வே அணி, பெங்களூரு ஏ.சி.எஸ், டெல்லி வருமான வரி அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து அணிகள் பங்கேற்கின்றன.



முதல் நாள் போட்டியில் ஆண்கள் பிரிவில் டெல்லி வருமான வரி அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. பெண்கள் பிரிவில் முதல் போட்டியில் கேரள மாநில மின்வாரிய அணியை எதிர்த்து தமிழ்நாடு ஜூனியர்ஸ் அணி விளையாடியது.



ஆட்டத்தின் பாதியில் மழை பெய்யத் துவங்கியதையடுத்து போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மின்சார தடையும் ஏற்பட்டதால் போட்டிகள் தொடர்வதில் சிரமம் ஏற்பட்டது. சுமார் ஒருமணி நேரம் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர், மைதானத்தில் தேங்கி இருந்த நீர் வெளியேற்றப்பட்டு, மீண்டும் போட்டி நடைபெற்றது.

மழை பெய்த காரணத்தால் பந்தை கையாள வீரர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இறுதியில், ஆண்கள் பிரிவில் டெல்லி வருமான வரி அணி 87-78 என்ற புள்ளிகள் அடிப்படையில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை வீழ்த்தியது. பெண்கள் பிரிவில் தமிழ்நாடு ஜூனியர்ஸ் அணியை 34-75 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி கேரள வாரிய மின்வாரிய அணி வெற்றி பெற்றது.

இதனிடையே, மாநகராட்சி உடனடியாக நிதி ஒதுக்கி, இதை உள்விளையாட்டு அரங்கமாக மாற்ற வேண்டும் என வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், ஏற்கனவே, உறுதியளித்திருந்த கைப்பந்து மைதானத்தில் பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்படுவதற்கான பணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.



விளையாட்டை ஊக்குவிக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்குமா..? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...