மேட்டுப்பாளையம் வனப் பகுதியின் மேல் தனியார் ஹெலிக்காப்டர் பறக்க தடை

மேட்டுப்பாளையம்: வன உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறி வனப் பகுதியின் மேல் தனியார் ஹெலிக்காப்டர் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்: வன உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறி வனப் பகுதியின் மேல் தனியார் ஹெலிக்காப்டர் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் பகுதியில் ஹெலிக்காப்டர் மூலம் வானில் வட்டமிட்டு பறந்தபடி இயற்கை அழகை ரசிக்க அழைப்பு விடுத்து நேற்று முதல் அதற்கான நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருபது நிமிடங்கள் பறந்தபடி மேட்டுப்பாளையம் பகுதியினை மேலிருந்து பார்த்து ரசிக்க நபர் ஒருவருக்கு ரூபாய் நான்காயிரம் என்ற கட்டணத்தில் ஒரு தனியார் நிறுவனத்தால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



முதல் நாளான நேற்று பலரும் ஆர்வமுடன் இதில் பயணித்த நிலையில், மேட்டுப்பாளையம் வனத்துறையினர் இப்பகுதி காடுகளின் மேலே ஹெலிக்காப்டர் பறந்து செல்லத் தடை விதித்து நோட்டிஸ் வழங்கினர். வனத்தின் இயற்கை அழகை காணும் வகையில் காடுகளை ஒட்டி பயணிகளோடு ஹெலிக்காப்டர் தாழ்வாக பறப்பதால் இதன் பெரும் சப்தத்தில் வன உயிரினங்கள் மிரண்டு ஓடுவதாகவும், இங்குள்ள யானைகளின் வழித்தட பாதை மற்றும் ஆற்றங்கரையோரத்தின் மேலே ஹெலிக்காப்டர் பறந்தால் யானைகள் திசை மாறி ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



மேலும், மனித-விலங்குகள் மோதல்கள் அதிகம் நிகழும் மேட்டுப்பாளையம் பகுதியில் இது போன்ற நிகழ்வுகள் நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும் என்றும், தடையை மீறி வனப் பரப்பிற்கு மேலோ அல்லது அதன் அருகாமையிலோ    ஹெலிகாப்டரை இயக்கினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் வனத்துறையினரின் இந்த நடவடிக்கை வன உயிரின ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...