தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு ரத்து

தூத்துக்குடி: கடந்த 5 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் நீடித்து வந்த 144 தடை உத்தரவை இன்று மாவட்ட நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது.

தூத்துக்குடி: கடந்த 5 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் நீடித்து வந்த 144 தடை உத்தரவை இன்று மாவட்ட நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை 100-ஆவது நாளை எட்டியது. இதையடுத்து பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு கொடுக்க அப்பகுதி மக்கள் திட்டமிட்டனர்.

இதை அறிந்த மாவட்ட நிர்வாகம் அங்கு 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது. அந்த தடையை மீறி பொதுமக்கள் பேரணியாக ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றபோது அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், 144 தடை உத்தரவு இன்று வரை நீட்டிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்பியதால் அந்த தடை உத்தரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...